பணம் வாழ்கைக்கு தேவை.... ஆனால் வாழ்க்கை பணத்திற்காக அல்ல! ஆஸ்திரேலிய பயணியிடம் ஆங்கிலத்தில் பேசி அசத்திய ஆட்டோ டிரைவர்! வைரல் வீடியோ!



australian-traveller-impressed-by-indian-auto-driver-en

இந்திய தெருக்களில் பலரின் இதயத்தையும் கவனத்தையும் கவரும் மனிதர்கள் தினமும் தோன்றுகின்றனர். அதில், வாழ்க்கை ஞானம் மற்றும் English fluency கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஒரு ஆட்டோ ஓட்டுநரின் கதை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலிய பயணியை கவர்ந்த ஆட்டோ ஓட்டுநர்

இந்தியாவுக்கு வந்திருந்த ஆஸ்திரேலியப் பயணி வில் ஸ்ட்ரோல்ஸ், அவர் பயணித்த ஆட்டோவில் இருந்த வயதான ஓட்டுநரின் ஆங்கிலப் புலமை மற்றும் நெகிழ்வான உரையாடலால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். உரையாடிய காட்சிகளை அவர் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததும் அது வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: காரில் செல்லும்போது திடீரென வலியால் கதறிய கர்ப்பிணி மனைவி! உடனே பிரசவம் பார்த்த கணவர்! வைரலாகும் பரபரப்பு வீடியோ....

மெல்போர்னில் பணியாற்றிய அனுபவம்

ஆட்டோ ஓட்டுநர் சரளமான ஆங்கிலத்தில் பேசுவதை கண்டு பயணி வியப்பில் ஆழ்ந்தார். மேலும், அவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் என்பதை சரியாக ஊகித்ததும் ஸ்ட்ரோல்ஸுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதற்கு காரணம், ஓட்டுநர் முன்னாள் மெல்போர்னில் சமையல்காரராக (Chef) பணியாற்றிய அனுபவம் என்று தெரிவித்தார்.

“நான் தொழில் அதிபர் அல்ல, மகிழ்ச்சியான மனிதன்”

பின்னர் பயணி, “இப்போது நீங்கள் இந்தியாவில் வணிகம் ஏதாவது செய்கிறீர்களா?” என்று கேட்டபோது, ஓட்டுநரின் சுருக்கமான பதில் இணையத்தில் பலரின் மனத்தையும் கவர்ந்தது. அவர் கூறியது: “நான் ஒரு தொழிலதிபர் அல்ல. நான் மகிழ்ச்சியாக வாழும் மனிதர். நான் பணக்காரர் இல்லை. பணம் வாழ்க்கைக்கு தேவையானது, ஆனால் வாழ்க்கை பணத்திற்காக அல்ல.”

தேநீர் கடையில் ஆங்கில வரவேற்பு

இதைத்தொடர்ந்து, ஓட்டுநர் பயணியை ஒரு சிறிய தேநீர் கடைக்குக் கொண்டு சென்றார். அங்கு சாய்வாலாவும் ஆங்கிலத்தில் உரையாடியதை வைத்து, இந்திய தெருக்களில் மறைந்திருக்கும் திறமைகள் குறித்து பலரும் பாராட்டுத் தெரிவித்தனர்.

சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள்

இந்த ஆட்டோ ஓட்டுநரின் பணிவு, அறிவு, மொழித் திறன் குறித்து பலரும் கருத்து பதிவு செய்து வருகிறார்கள். “இவர் என் மேலாளரை விட நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்” என்றும், “ஒருவரின் தோற்றத்தைக் கொண்டு அவரை மதிப்பிடக் கூடாது” என்றும் நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சாதாரணமானவர்களாகத் தோன்றினாலும், அரிய அனுபவங்களையும் ஆழமான ஞானத்தையும் கொண்ட மனிதர்கள் இந்திய தெருக்களில் எங்கும் இருக்கிறார்கள் என்பதை இந்த வைரல் தருணம் இன்னுமொரு முறை நிரூபிக்கிறது.

 

இதையும் படிங்க: ரயில் நிலையத்தில் தனியாக அமர்ந்து அமைதியாக அழுது கொண்டிருந்த நபர்! நெஞ்சை உருகவைத்த பதில்! வைரலாகும் வீடியோ..!!