அடேங்கப்பா.. 5 வயதில் காவலர் பொறுப்பை ஏற்ற சிறுவன்; காரணம் இதுதான்.. நெகிழ்ச்சியில் தாய்-மகன்..!



At the age of 5, the boy took charge of the guard

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சர்குஜா பகுதியை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் நமன் ராஜ்வாடே. இவரின் தந்தை காவலராக பணியாற்றி வந்த நிலையில், சமீபத்தில் சாலை விபத்தில் இறந்துவிட்டார். 

இதனைத்தொடர்ந்து, கருணை பணி நியமனத்தின் கீழ் சிறுவனுக்கு காவலர் பணி வழங்கப்பட்டுள்ளது, இதனால் தற்போது சிறுவன் குழந்தை காவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

சத்தீஸ்கர் மாநிலம்

சிறுவனுக்கு 18 வயதாகும் போது காவலர் பொறுப்பு வழங்கப்படும். அதுவரை சிறுவன் மற்றும் அவரது தாய் காவலரின் சம்பளத்தில் பாதியை உதவித் தொகையாக பெறுவார்கள்.