5 மாதமாக அக்கா - தங்கையான சிறுமிகள் பாலியல் பலாத்காரம்.. நட்பாக பழகி பயங்கரம்..! உறவினர் கொடூர செயல்.!!

5 மாதமாக அக்கா - தங்கையான சிறுமிகள் பாலியல் பலாத்காரம்.. நட்பாக பழகி பயங்கரம்..! உறவினர் கொடூர செயல்.!!



Andra Pradesh East Godavari 2 Sisters Sexual Abused by Relation Pawan Kumar

பாட்டியின் வீட்டில் இருந்த 2 சிறுமிகளிடம் பாசத்துடன் பழகுவதுபோல பழகிய உறவினர், அவர்களை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் நடந்துள்ளது.

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டம், பெத்தபாடு பகுதியை சார்ந்த 32 வயது இளம்பெண்ணின் கணவர், கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக உயிரிழந்துள்ளார். இவருக்கு 11 வயது மற்றும் 9 வயதுடைய 2 மகள்கள் உள்ளனர். 

கணவர் இறந்தபின்னர் தனது தாயாரின் வீட்டில் இளம்பெண் தனது மகள்களுடன் வசித்து வந்த நிலையில், ஹைதராபாத்தில் வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது, இளம்பெண்ணின் உறவினரான பவன்குமார் (வயது 30) என்பவர், அவ்வப்போது இளம்பெண்ணின் 2 பிள்ளைகளுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். 

உறவினர் என்பதால் பெண்ணும் தனது மகளை கவனித்துக்கொள்கிறார் என்று எண்ணி இருந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய பவன்குமார், சிறுமிகளிடம் ஆசைவார்த்தை கூறி கடந்த 5 மாதம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

Andra Pradesh

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சிறுமிகள் இருவருக்கும் வயிற்று வலி ஏற்படவே, சிறுமியின் பாட்டி இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு, 2 சிறுமிகளும் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி பெத்தபாடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் பவன்குமாரை கைது செய்து சிறையில் அடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.