பயங்கரம்: பிரேக் பிடிக்காததால் பேருந்து நிலையத்திலேயே 3 பேர் பலி., பதைபதைப்பு வீடியோ வெளியானது.!  

பயங்கரம்: பிரேக் பிடிக்காததால் பேருந்து நிலையத்திலேயே 3 பேர் பலி., பதைபதைப்பு வீடியோ வெளியானது.!  



Andhra Pradesh Bus Accident CCTV Visual Here 

 

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விஜயவாடா, நெகலூர் பேருந்து நிலையத்தில், நேற்று விஜயவாடாவில் இருந்து குண்டூர் நோக்கி அரசு பேருந்து புறப்பட்டு செல்வதற்கு காத்திருந்தது. 

அப்போது ஓட்டுநர் பேருந்தை இயக்கிய நிலையில், திடீரென பேருந்தின் பிரேக் பிடிக்காத காரணத்தால், நடைமேடையின் மீது பேருந்து பாய்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் பேருந்துக்கு முன்புறம் அமர்ந்திருந்த நடத்துனர் வீரய்யா, பெண், பச்சிளம் குழந்தை உட்பட 3 பேர் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

அங்கிருந்த பயணிகளில் சிலர் காயமடைந்தனர். இந்நிலையில், விபத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஓட்டுநர் பேருந்தை இயக்கியபோது, தறிகெட்டு நடந்த சோகம் அதில் பதிவாகியுள்ளது.