நொடியில் வந்து விளையாடிய எமன்! தண்ணீர் பாட்டில் மூடியை விழுங்கி 1.5 வயது குழந்தை உயிரிழப்பு! பெரும் அதிர்ச்சி சம்பவம்..
ஆந்திர மாநிலம் அனந்தபூரில் நடந்த ஒரு துயரச் சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வேலைக்கு சென்ற தாய் அருகே இருந்தபோது நிகழ்ந்த இந்த விபத்து பெற்றோர்களுக்கு பெரும் எச்சரிக்கையாக மாறியுள்ளது.
அலுவலகத்தில் தாயுடன் சென்ற குழந்தை
அனந்தபூரைச் சேர்ந்த யுகந்தர் – மவுனிகா தம்பதிக்கு ரக்ஷித்ராம் என்ற ஒன்றரை வயது மகன் இருந்தார். இருவரும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்தனர். குறிப்பாக, மவுனிகா இரவு நேர பணியில் ஈடுபட்டு வந்ததால், தனது குழந்தையை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வது அவரது வழக்கமாக இருந்தது.
பாட்டில் மூடியால் உயிரிழப்பு
நேற்று முன்தினம் மவுனிகா வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, ரக்ஷித்ராம் அங்கு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அங்கிருந்த தண்ணீர் பாட்டில் மூடியை விழுங்கியதால் அது தொண்டையில் சிக்கியது. இதனால் அவர் அலறி அழுததை பார்த்து தாய் மற்றும் அலுவலக ஊழியர்கள் உடனே ஓடி வந்து குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையும் பலிக்காமல் குழந்தை உயிரிழந்தது.
அப்பகுதியில் பரவிய சோகம்
இந்த சம்பவம் மவுனிகா உள்ளிட்ட குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியது. அப்பகுதியிலும் துயரம் பரவியது. குழந்தைகள் விளையாடும் இடங்களில் பாட்டில் மூடிகள் போன்ற சிறிய பொருட்களை வைக்கக்கூடாது என மருத்துவர்கள் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் வலியுறுத்துகிறது.