வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் கைவரிசை... அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமி!

வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் கைவரிசை... அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமி!



an-youth-from-agra-murdered-a-nine-year-old-kid-police

ஆக்ரா மாவட்டத்தில் காணாமல் போன ஒன்பது வயது சிறுமி அவரது வீட்டின் ஸ்டோர் ரூமில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம்  அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 19 வயதை இளைஞர் ஒருவரை கைது செய்திருக்கிறது காவல்துறை.

இந்திய தலைநகர் டெல்லியை அடுத்து உள்ள ஆக்ரா மாவட்டத்தில் ஒன்பது வயது சிறுமியை காணவில்லை என்று அவரது பெற்றோர் காவல் துறையிடம் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறை அவர்களின் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 19 வயதில் இளைஞர் ஒருவர் மீது சந்தேகம் கொண்டு அவரை கைது செய்து விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றன.

Agra

கைது செய்யப்பட்ட நபர் சிறுமியின் வீட்டில் இருந்து 20000 ரூபாய் ரொக்க பணத்தை திருடியதாகவும் அதை சிறுமி பார்த்ததால் அவரை கொலை செய்ததாகவும் காவல்துறையிடம்  ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறது காவல்துறை. மேலும் திருடப்பட்ட 20000 ரூபாய் ரொக்க பணமும் மீட்கப்பட்டிருக்கிறது.

பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால்  கொலை செய்த இளைஞர் மற்றும் குடியிருப்பில் இருக்கும் மற்ற நபர்களிடம் தங்கள் மகளை பார்த்துக் கொள்ளுமாறு கூறி விட்டுச் சென்றிருக்கின்றனர். அப்போது வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த அந்த இளைஞன்  சிறுமியின் வீட்டிலிருந்து பணத்தை திருடி இருக்கிறான். இதனை சிறுமி பார்த்ததால் அவர் வெளியே சொல்லி விடுவாரோ என்று பயந்து சிறுமியை கொலை செய்துள்ளான். மேலும் அனைவரும் குழந்தையை காணவில்லை என்று தேடும் போது அந்த இளைஞனும் அவர்களுடன் சேர்ந்து குழந்தையை தேடி இருக்கிறான் என  காவல்துறை டிஜிபி விகாஸ் குமார் தெரிவித்தார்.