ரத்தம் சொட்டச் சொட்ட... மருமகள் தலையுடன் காவல் நிலையம் புகுந்த மாமனார்... ஆக்ராவை உலுக்கிய பயங்கர சம்பவம்.!

ரத்தம் சொட்டச் சொட்ட... மருமகள் தலையுடன் காவல் நிலையம் புகுந்த மாமனார்... ஆக்ராவை உலுக்கிய பயங்கர சம்பவம்.!



a-man-who-brutally-murdered-his-daughter-in-law-surrend

குடும்ப தகராறு காரணமாக மருமகளின் தலையை துண்டித்து கொலை செய்த மாமனார் அந்தத் தலையுடன் காவல் நிலையம் சென்று சரணடைந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவின்  மாலிக்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரகுவீர் சிங்(62), இவரது மகன் கௌரவ் சிங். கடந்த 2018 ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்த இவர் ஃபரூகாபாத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரியங்கா சிங்(28), தனது இரண்டு குழந்தைகளுடன் கணவர் வீட்டில் வசித்து வந்தார். ரகுவீர் சிங்கின் மூத்த மகன் இறந்து போனதால் அவரது மனைவியும் அந்த வீட்டில் வசித்து வருகிறார்.

India

இந்நிலையில் இரண்டு மருமகள்கள் இடையே அடிக்கடி சண்டை நடைபெற்றிருக்கிறது. அப்போது அவர்கள் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றிருக்கிறார் ரகுவீர் சிங். இதனைத் தொடர்ந்து ஆத்திரத்தில் இருந்த பிரியங்கா சிங் ரகுவீர் சிங்கை கீழே பிடித்து தள்ளி இருக்கிறார். இதனால் கோபமடைந்த ரகுவீர் சிங் கோடாரியாள் பிரியங்காவின்  தலையில் வெட்டி படுகொலை செய்துள்ளார்.

பின்னர் அவரது தலையை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ளார். இவர் ரத்தம் சொட்ட சொட்ட தலையுடன் வருவதை பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சடைந்திருக்கின்றனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் நடந்த சம்பவங்களை விவரித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல் துறையினர் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.