நெஞ்சை பதைபதைக்க வைக்கும் ஒரு தலை காதல் விவகாரம்... தீயில் கருகிய மாணவர்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் ஒரு தலை காதல் விவகாரம்... தீயில் கருகிய மாணவர்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!



a-heart-wrenching-love-affair-student-burnt-in-fire-sho-NJWAW7

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள அரசு அறிவியல் கல்வி நிறுவனத்தில் பி.ஹெச்டி பயின்று வந்த மாணவர் கஜனன் முண்டே. இவர் அதே கல்லூரியில் பயிலும் மாணவியை கஜனன் ஒருதலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மாணவியிடம் தன்னை காதலிக்கும் படியும், திருமணம் செய்து கொள்ளும் படியும் வற்புறுத்தியுள்ளார் மாணவன் கஜனன். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் சம்பவத்தன்று மாணவி பேராசிரியர் ஒருவரை சந்திப்பதற்காக அவரது அறைக்கு சென்றுள்ளார். அவரைப் பின் தொடர்ந்து சென்ற கஜனன் தான் கொண்டு வந்த பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்துக் கொண்டு அங்கிருந்த மாணவியை கட்டிப்பிடித்து உள்ளார்.

Fire incident

இதனைத்தொடர்ந்து அந்த அறையில் வந்த தீ மற்றும் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த கல்லூரியில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள் கஜனின் உடல் முழுவதுமாக கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மாணவி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து ஒஸ்மான்புரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது