ஸ்பாவில் வேலை பார்க்கும் சிறுமி... தினமும் 10 ஆண்களுக்கு மேல் பாலியல் பலாத்காரம் செய்த பகீர் சம்பவம்..!

ஸ்பாவில் வேலை பார்க்கும் சிறுமி... தினமும் 10 ஆண்களுக்கு மேல் பாலியல் பலாத்காரம் செய்த பகீர் சம்பவம்..!



A girl working in a spa... Bagheer raped more than 10 men every day..!

ஸ்பாவில் வேலை செய்யும் 14 வயது சிறுமி ஒருவர் தன்னை தினமும் 10-15 ஆண்களால் கட்டாய பாலியல் உறவுக்கு ஆளாக்கபடுவதாக அதிர்ச்சிக்குரிய புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

டெல்லி குருகிராமை சேர்ந்த 14 வயது சிறுமி வேலை தேடி வந்துள்ளார். கடந்த மாதம் 14 வயது சிறுமிக்கு பூஜா என்ற பெண் அறிமுகமாகி இருக்கிறார். அவரிடம் தனக்கு வேலை வேண்டும் என்று சிறுமி கேட்டுள்ளார். தனக்கு தெரிந்த டாக்டரின் கிளினிக்கில் உதவியாளராக அந்த சிறுமியை சேர்த்துவிட்டுள்ளார் பூஜா.

பூஜா சொல்லியதால் கிளினிக்கில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அந்த சிறுமியை இரண்டு நாட்களிலேயே வேலையில் இருந்து டாக்டர் நிறுத்திவிட்டார். இதனால் மீண்டும் வேலை தேடிவந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியை பூஜா மீண்டும் சந்தித்துள்ளார். வேலை பறிபோனதை சிறுமி கூறிய நிலையில், குருகிராமில் இருக்கும் ஓமக்சே என்ற மாலில் இருக்கும் ஸ்பா ஒன்றில் வரவேற்பாளர் வேலை இருக்கிறது எனக் கூறி அங்கு சேர்த்துவிட்டுள்ளார்.

ஸ்பாவை நடத்துபவர் பூஜாவின் உறவினர். வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே, ஸ்பா உரிமையாளர் ஸ்பாவுக்கு வந்த ஒருவரிடம் சிறுமியை கட்டாய பாலியல் உறவில் ஈடுபட வைத்துள்ளனர். பாலியல் வன்புணர்வுக்கு ஆளான அந்த சிறுமி, வேலைக்கு வரமாட்டேன் எனக் கூறியுள்ளார். இந்நிலையில், பாலியல் வன்புனர்வு செய்ததை அவர்கள் வீடியோ எடுத்து வைத்து மிரட்டியுள்ளனர். 

இந்நிலையில் சிறுமி தனது தாயுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் தனக்கும் தனது பெற்றோரின் உயிருக்கும் அபத்து இருப்பதாக புகாரில் கூறியுள்ளார். சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் மோசடி பெண் பூஜா, ஸ்பாவை நடத்தும் ஜூமா, ரூபேல், சதாம் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.