பால் பாக்கி தராததால் 3 பேர் சுட்டுக்கொலை.... ஒருவர் படுகாயம்... கொலையாளிகளை தீவிரமாக தேடி வரும் காவல்துறை.!

பால் பாக்கி தராததால் 3 பேர் சுட்டுக்கொலை.... ஒருவர் படுகாயம்... கொலையாளிகளை தீவிரமாக தேடி வரும் காவல்துறை.!



3-people-were-shot-dead-because-of-non-payment-of-milk

பீகார் மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பீகார் மாநிலம் பாட்னா அருகே நியாஜிபூர் என்ற இடத்தில் இரு குழுக்கள்  துப்பாக்கிகளுடன் கடுமையாக மோதிக்கொண்டன. இந்த சம்பவத்தில் குண்டு பாய்ந்து மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Bihar

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் பிரதீப் குமார், சைலேஷ் குமார் மற்றும் ஜெய்சிங் என தெரிய வந்திருக்கிறது. மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த  மிண்டூஸ் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Bihar

400 ரூபாய் பால் பாக்கி தொடர்பாக ஏற்பட்ட மோதல் துப்பாக்கி சூட்டில் மூன்று பேரின் உயிரை காவு வாங்கிய  சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக கொலையாளிகளை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.