நடிகை அஞ்சலியா இது.? உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே.!?
CBSE தேர்வில் முதலிடம் பெற்ற ஹரியானா மாணவி பாலியல் பலாத்காரம்!! அதிர்ச்சியில் பெற்றோர்
CBSE தேர்வில் முதலிடம் பெற்ற ஹரியானா மாணவி பாலியல் பலாத்காரம்!! அதிர்ச்சியில் பெற்றோர்
ஹரியானாவில் 19 வயது கல்லூரி மாணவி வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு பாலியல் பலத்தகாரம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் 12 CBSE தேர்வில் முதலிடம் பிடித்து குடியரசு தலைவரிடம் விருது பெற்றவர் ஆவார்.
இவர் தற்பொழுது கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த புதன்கிழமையன்று அவருடைய கிராமத்திலிருந்து வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அந்த சமயம் காரில் வந்த மூன்று பேர் மனைவியை வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றியுள்ளனர்.
பின்னர் அந்த பெண்ணை ஒரு பண்ணைக்கு கூட்டி சென்ற அந்த கும்பல், அவரை அங்கு வைத்து கொடூரமான முறையில் மாற்றி மாற்றி கற்பழித்துள்ளார். அந்த பண்ணையில் வேலை பார்த்த இன்னும் சிலரும் கற்பழித்துள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. அந்த பெண் தன் சுயநினைவை இழக்கும் வரை கொடூரமாக கற்பழித்துள்ளனர் அந்த காமவெறி பிடித்த கும்பல்.
பின்னர் சுயநினைவு இழந்த அந்த பெண்ணை அவர்களே காரில் ஏற்றிவந்து ஒரு பேருந்து நிறுத்தத்தில் போட்டுள்ளனர். அதோடுமட்டுமல்லாமல் அவர்களே அந்த பெண்ணின் பெற்றோர்களை தொலைபேசிலயில் தொடர்புகொண்டு உங்கள் மகள் மயக்க நிலையில் விழுந்து கிடக்கிறார் என்ற தகவலையும் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்த பெற்றோர் அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் ரேவரியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். பின்னர் அந்த வழக்கானது சமத்துவம் நடந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
அந்த பெண் கொடுத்த தகவலின்படி, அந்த மூவரும் அந்த பெண்ணின் ஊரான நயா கோன் கிராமத்தை சேர்ந்த பங்கஜ், மனீஷ் மற்றும் நிஷு என்பது தெரியவந்துள்ளது. பின்னர் அந்த மூவரின் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என்ற தகவல் தெரியவில்லை.
இதை பற்றி அந்த பெண்ணின் தாயார் கூறியபோது "என் மகள் 12 CBSE தேர்வில் முதலிடம் பிடித்து குடியரசு தலைவரிடம் விருது பெற்றவள். மேலும் பிரதமர் மோடியும் இவளை பாராட்டியுள்ளார். என் மகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும்" என்று கண்ணீர் மல்க கூறினார்.