முதியோர்களே ஜாக்கிரதை.. மூச்சுத்திணறல், மலச்சிக்கல் ஏற்பட்டால் சாதாரணமா விட்டுறாதீங்க.. உயிரே போகும் அபாயம்..!!

முதியோர்களே ஜாக்கிரதை.. மூச்சுத்திணறல், மலச்சிக்கல் ஏற்பட்டால் சாதாரணமா விட்டுறாதீங்க.. உயிரே போகும் அபாயம்..!!



old-peoples-health-problem

உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது உடலில் பல அறிகுறிகள் ஏற்படுகிறது. அதை பெரும்பாலும் நாம் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவோம். ஆனால் அதை அப்படியே விடக்கூடாது. ஏனெனில் அவற்றில் சில தீவரமான நோயின் அறிகுறிகளாக கூட இருக்கலாம். 

அதிக உடல்நல பிரச்சினைகள் மற்றும் நோய்களால் எளிதாக பாதிக்கப்படுபவர்கள் முதியோர்கள் என்பதால், இது போன்ற அறிகுறிகளை தவிர்க்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் நோய்கள் மற்றும் உடலில் குறைபாடுகள் ஆபத்தாக மாறுவதற்குள் தடுக்க இயலும். குறிப்பாக முதியோர்கள் கீழ்கண்ட அறிகுறிகளை தவிர்க்கவேகூடாது.

மலச்சிக்கல் :

மலம் கழித்தலுக்கு குடல் இயக்கத்தின் போது கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டியிருந்தால், அது திசுக்களை மிகவும் கஷ்டப்படுத்தலாம். இது மூல நோய்க்கு வழி வகுக்கும். இருப்பினும் எப்போதாவது மலச்சிக்கல் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் அடிக்கடி ஏற்பட்டால் கட்டி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

மூச்சு திணறல் : 

அசாதாரணமான மூச்சுத்திணறல் என்பது தமனிகளில் அடைப்பு ஏற்பட்டதன் அறிகுறியாக கூட இருக்க வாய்ப்புள்ளது. ரத்தக் குழாய்களின் அடைப்பு ஏற்பட்டால் அது ரத்தம் சுலபமாக பாய்வதில் தடை ஏற்படுத்தி மாரடைப்புக்கு வழிவகுக்கும். தலைசுற்றல், மார்பில் இறுக்கம் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவையும் மாரடைப்பின் அறிகுறிகள் தான்.

மார்பக வீக்கம் :

முதியோர்களுக்கு மார்பக வீக்கம் ஏற்படுவது மார்பக புற்றுநோயின் முக்கிய அறிகுறியாகும். இதனை புறக்கணிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி ஸ்கேன் செய்து பார்ப்பது நல்லது.

பிறப்புறுப்பில் ரத்தப்போக்கு :

மாதவிடாய் நின்ற பிறகும் பிறப்புறுப்பில் ரத்தப்போக்கு ஏற்படுவது மிகவும் கவலைக்குரியதே. உடலுறவின் போது ஏற்படும் ரத்தப்போக்கை தீவிரமாக கருதவில்லை. ஆனால் பொதுவாகவே ரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர் அணுகி பரிசோதனை செய்துவிட வேண்டும். ஏனெனில் கருப்பை புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்க வாய்ப்புண்டு.