மஞ்சள் உடையில் மார்க்கமாக போஸ் கொடுத்த ஸ்ரேயா.. வைரலாகும் புகைப்படங்கள்.!
குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளி போடுவது சரியா? எவ்வளவு காலம் வரை தள்ளிப்போடலாம்?
குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளி போடுவது சரியா? எவ்வளவு காலம் வரை தள்ளிப்போடலாம்?

இன்றைய நவீன கால சூழலில் பெண்கள் பலரும் தங்களது திருமணத்தை தள்ளி போடுகின்றனர். திருமணம் ஆன பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளி போடுகின்றனர். அவற்று செய்வது சரியா? தவறா? வாங்க பாக்கலாம்.
ஒரு பெண் தாய்மை அடைவதற்கான ஏற்ற வயதுதான் அவளின் திருமண வயதும் கூட. ஒரு பெண் 23 வயதில் தாயாவதற்கான அணைத்து தகுதிகளையும் முழுமையாக பெற்றுவிடுகிறாள். 23 வயதுதான் ஒரு பெண்ணின் சரியான திருமண வயதும் கூட.
ஒரு பெண் 23 வயதில் இருந்து 28 வயதுவரை குழந்தை பெற்றுக்கொள்ளலாம். அதை மீறினால் 30 வயதுவரை தள்ளி போடலாம். அதையும் தாண்டி தள்ளி போடுவது மிகவும் தவறு.
இன்றைய நவீன கால சூழலில் பெண்கள் பலரும் வலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். அவ்வாறு வேலைக்கும் செல்லும் பெண்கள் அனைவரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற இலக்குடன் போராடுகின்றனர். ஒரு வழியாக அவர்கள் திருமணம் செய்துகொள்வது அவர்களது 35 வயதில்.
30 வயதை தாண்டி திருமணம் செய்யும் பெண்களுக்கு கரு முட்டை உருவாவதில் தாமதம் ஏற்பட்ட கூடும். எடை குறைவான குழந்தை, குறை பிரசவம் இது போன்று ஏராளமான விபரீதங்கள் வரக்கூடும். அந்த மாதிரியான பெண்கள் திருமணத்திற்கு முன்பும், குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முன்பும் மருத்துவ ஆலயசனைகள் பெறுவது மிகவும் நன்று.
மருத்துவரின் வழிகாட்டுதலோடு மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கருமுட்டையை முன்பே எடுத்து ஃப்ரீஸ் செய்து வைப்பதன் மூலம் எந்த வயதிலும் குழந்தை பெறலாம். ஆனால் அது சோதனைக்குழாய் மூலம்தான் சாத்தியப்படும். இதில் நூறு சதவிகிதம் உத்தரவாதம் அளிக்க முடியாது. குறிப்பிட்ட வயதுக்குள் தாய்மை அடைவது மட்டுமே சரியானது.