தலைதூக்கும் பொள்ளாச்சி விவகாரம்! ஆவேசத்தில் தரலோக்கலாக பொங்கியெழுந்த பிரபல நடிகை.!

தலைதூக்கும் பொள்ளாச்சி விவகாரம்! ஆவேசத்தில் தரலோக்கலாக பொங்கியெழுந்த பிரபல நடிகை.!


vijaya-lakshmi-tweet-about-pollachi-issue

பொள்ளாச்சியில்  20 பேர் கொண்ட காமக் கொடூர கும்பல், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி 200 பெண்களிடம் நட்பாக பேசி மடக்கி, அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் அதில் இளம்பெண் ஒருவரை பாலியல் கொடுமை செய்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியானது. இதனை கண்ட அனைவரும் இரத்தம் கொடுத்து போனர். மேலும் அந்த கொடூர மிருகங்களுக்கு உடனடியாக தணடனை கொடுக்கவேண்டும் எனவும் குரல் எழுப்பி வந்தனர்.

pollachi

அதனை தொடர்ந்து  பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரி ராஜன், சதீஷ், வசந்த குமார், திருநாவுக்கரசு என்ற குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 
மேலும் இந்த காமக்கொடூரன்களுக்கு எதிராக  திரைபிரபலங்களும், அரசியல் கட்சியினரும், பொது மக்களும், சமூக வலைதளவாசிகளும் கொந்தளித்து வருகின்றனர். 

pollachiஇந்நிலையில் பிரபல நடிகை விஜயலஷ்மி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டம் தெரிவித்து கடுமையான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.