விஜய் டிவி பாக்கியலட்சுமி தொடரில் இருந்து முக்கிய கதாபாத்திரம் விலகல்?.. அசத்தல் தகவல் இதோ.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

விஜய் டிவி பாக்கியலட்சுமி தொடரில் இருந்து முக்கிய கதாபாத்திரம் விலகல்?.. அசத்தல் தகவல் இதோ.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!



Vijay TV Reshma Could Not Getting out from Bakyalatsumi serial

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, தமிழ் மக்களை இன்று வரை பரபரப்புடன் வைத்திருக்கும் தொடர்களில் முக்கியமானது பாக்கியலட்சுமி நெடுந்தொடர். இத்தொடரில் ரேஷ்மா பசுபுலேட்டி, நேஹா மேனன், விஜே விஷால், கே.எஸ் சுசித்ரா, ரித்விகா தமிழ் செல்வி, நந்திதா ஜெனிபர் ஆகியோர் நடித்துள்ளனர். 

நெடுந்தொடரில் கோபி நாயகி பாக்கியலட்சுமியை பிரிந்து சென்று, தனது காதல் மனைவி ராதிகாவுடன் வாழ்ந்து வருகிறார். இக்கரைக்கு அக்கறை பச்சை என்பதை போல திருமணம் செய்து புலம்பினாலும், அவர் நாயகி பாக்கியலட்சுமியை துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு பல காய்களை நகர்த்தி வருகிறார். 

vijay tv

அப்போது வரை மக்களிடம் ராதிகா கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், திருமணத்திற்கு பின்னர் கோபியுடன் சேர்ந்து ராதிகாவையும் மக்கள் வறுத்தெடுக்க தொடங்கிவிட்டனர். இதனால் ஒருகட்டத்தில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதிஷ் குமார் இத்தொடரில் இருந்து விளங்குவதாகவும் உறுதியற்ற தகவல் வெளியாகின. 

ஆனால், அவை அனைத்தும் கிளப்பி விடப்பட்ட வதந்திகள் என்பது பின்னாட்களில் உறுதியானது. இந்த நிலையில், தற்போது ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரேஷ்மா தொடரில் இருந்து வெளியேறுவதாக வதந்திகள் பரவிய நிலையில், அவை போலியான கூற்றுகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ராதிகா கதாபாத்திரத்தில் ரேஷ்மாவே தொடருவார்.