காக்கா, கழுகு.. லியோ வெற்றிவிழாவில் தளபதி சொன்ன குட்டி ஸ்டோரி.! அதிர்ந்த அரங்கம்!!



Vijay told small story in leo success meet

தற்போது வெளியாகி மக்களிடையே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் லியோ.இப்படத்தை தளபதி விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் போன்ற பல்வேறு நடிகர்களின் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.
இப்படம் வெளியாக பல்வேறு சர்ச்சைகள் உண்டான நிலையில் படம் வெளியாகிய முதல் நாளிலே ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் சாதனை படைத்தது.

அத்துடன் லியோ படம் வெளியாகிய ஒரு வாரம் முடிவில் 461 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது. இதனைத் தொடர்ந்து விஜய்யின் தலைமையில் நேற்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வெற்றி விழா நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பட குழுவினர் பலரும் கலந்து கொண்டு தங்களது அனுபவம் பற்றியும், நடிகர் விஜய் பற்றியும் பேசினர்.

vijay

அதன் பின் பேசிய நடிகர் விஜய், ரசிகர்களான உங்களுக்காக என் தோலை செருப்பாக தைத்தால் கூட உங்கள் அன்புக்கு ஈடு ஆகாது என மனம் நெகிழ்ந்து கூறினார். இதை தொடர்ந்து அவர் ரசிகர்களுக்கு ஒரு குட்டி ஸ்டோரி ஒன்றை சொல்லத் தொடங்கினார். அதில் இரண்டு பேர் வேட்டைக்காக காட்டுக்குள் சென்றார்கள்.

அக்காட்டில் புலி, மான்,காக்கா, கழுகு என பல்வேறு மிருகங்கள் உள்ளநிலையில் வேட்டைக்காக சென்றவர்களில் ஒருவன் அம்பை எய்தி முயலை பிடித்து வந்தான், மற்றொருவன் யானையை குறிவைத்து ஒன்றும் கிடைக்காமல் வந்தான், இதில் யார் வெற்றியாளர்?. தன் இலக்கை பெரியதாக கருதுபவனே வெற்றியாளர் என கூறி யானையை குறி வைத்தவனை வெற்றியாளர் என கூறினார், எப்போதும் பெரிய விஷயத்திற்கு கனவு காணுங்கள், ஜெயிக்க முயற்சி செய்யும் ஒவ்வொருவருக்கும் ஒரு இடம் உண்டு நண்பா எனக்கு கூறி தனது குட்டி ஸ்டோரியை முடித்தார் நடிகர் விஜய்.