அவர்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.! இதை மட்டும் செய்யாதீர்கள்.! மாணவர்களுக்கு தளபதி விடுத்த கோரிக்கை!!

அவர்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.! இதை மட்டும் செய்யாதீர்கள்.! மாணவர்களுக்கு தளபதி விடுத்த கோரிக்கை!!



Vijay speech in education award function

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை அவர்களது பெற்றோர்களுடன்  நடிகர் விஜய் இன்று சந்தித்தார். சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் சாதனை மாணவ மாணவிகளுக்கு 
பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்  வழங்கப்பட்டது.

இந்த விழாவில் பேசிய தளபதி விஜய், நான் நிறைய ஆடியோ நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகளில் பேசியுள்ளேன். ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சியில் பேசுவது இதுதான் முதல் முறை. பெரிய பொறுப்புணர்ச்சி வந்ததைப்போல் மனதிற்குள் உணர்கிறேன். கல்விதான் ஒருவரது பறிக்க முடியாத சொத்து. தேர்ச்சி பெறாத மாணவர்களை சக மாணவர்கள் ஊக்குவிக்க வேண்டும். வருங்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாகிய உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. 

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள்.அதேவேளை உங்களது தனிப்பட்ட அடையாளத்தை எக்காரணம் கொண்டும் விட்டுவிடாதீர்கள். நம் வாழ்க்கை நம் கையில்தான். முடிந்தவரை எல்லா தலைவர்களை பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள். பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீர். தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் உங்கள் பெற்றோர்களிடம் சென்று இனிமேல் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீர்கள் என்று கூறிப்பாருங்கள். நீங்கள் கூறினால் கண்டிப்பாக நடக்கும் என்று கூறியுள்ளார்.