என்னோட ஹீரோ.. அந்த பிரபல நடிகருடன் காதலை உறுதி செய்தாரா பிக்பாஸ் அர்ச்சனா.!
மிக்ஜம் புயல் விஷமிகளின் விஷமத்தனத்தை கண்டுபிடித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்.!
மிக்ஜம் புயல் விஷமிகளின் விஷமத்தனத்தை கண்டுபிடித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்.!
சமீபத்தில் வங்கக்கடலில் ஏற்பட்ட மிக்ஜம் புயல் ஒட்டுமொத்த சென்னையையும் புரட்டி போட்டு விட்டது. அந்த புயல் ஆந்திர மாநிலத்தை நோக்கி சென்று அங்கே கரையை கடந்து விட்டது. இந்த நிலையில் புயல் கரையை கடந்த 3 நாட்கள் சென்ற பின்னரும் மக்கள் அந்த புயலின் தாக்கத்திலிருந்து மீண்டு வர இயலவில்லை.
பல்வேறு பகுதிகளில் இன்னும் மழை நீர் தேங்கி நிற்கும் சூழ்நிலை தான் காணப்படுகிறது. சென்னை வாசிகள் அனைவரும் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் தான், ஒரு துயர சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதாவது சென்னையில் ஒரு பகுதியில் மழை நீர் வெளியேறாமல் இருந்த இடத்தில் வசித்த மக்கள் அவதியுற்று வருகிறார்கள். இந்த நிலையில் தான் சில சமூக விரோதிகள் அந்த தண்ணீரில் ரசாயனத்தை கலந்து விட்டிருக்கிறார்கள். இது குறித்த தகவல் விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு தெரிய வந்ததால், உடனடியாக விஜய் மக்கள் இயக்கத்தினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று அங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்கள்.
அந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகளும், விஜயின் ரசிகர்களும் இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா? என்ன கொடுமை வாழ்த்துக்கள் விஜய் மக்கள் இயக்கத்தினர் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.