நேற்று தான் விசாரித்தேன்.. நல்லா இருக்காருன்னு சொன்னாங்க.! இன்னைக்கு இப்டி ஆகிடுச்சு..! வெற்றிமாறன் வெளியிட்ட உருக்கமான வீடியோ.!
நேற்று தான் விசாரித்தேன்.. நல்லா இருக்காருன்னு சொன்னாங்க.! இன்னைக்கு இப்டி ஆகிடுச்சு..! வெற்றிமாறன் வெளியிட்ட உருக்கமான வீடியோ.!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக சினிமா நடிகர்கள் அடுத்தடுத்து உயிரிழந்துவருவது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இறந்தவர்களில் பெரும்பாலானோர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, கபாலி மற்றும் அசுரன் போன்ற திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் இன்று காலை உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், இயக்குநர் வெற்றிமாறன் உருக்கமுடன் நிதிஷ் வீரா மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ”நண்பர் நிதிஷ் வீரா கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார் என்று நேற்று மாலைதான் எனக்கு தகவல் வந்தது.
உடல்நலம் குறித்து நேற்று தான் விசாரித்தேன். 2 நாட்களுக்குள் உடல்நலம் தேறிடுவார் என சொன்னார்கள். ஆனால் இன்று காலை 6 மணிக்கு அவர் இறந்துவிட்டார் என்ற செய்திதான் வந்தது. அசுரன் படத்திற்கு பிறகு நிறைய படங்களில் நடிப்பதாக சொல்லிக்கொண்டிருந்தார் . அவருடைய இந்த இழப்பு அவர் குடும்பத்திற்கும், என்னைப்போல அவருக்கு தெரிந்தவர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு என்று தெரிவித்துள்ளார்.