தங்கலான் சூட்டிங் ஓவர்... விக்ரம் வெளியிட்ட நெகிழ்ச்சியான ட்வீட் மற்றும் அசத்தலான புகைப்படம்.!

தங்கலான் சூட்டிங் ஓவர்... விக்ரம் வெளியிட்ட நெகிழ்ச்சியான ட்வீட் மற்றும் அசத்தலான புகைப்படம்.!



thangalanshoot-wrap-up-today-vikaram-updates-shooting-s

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான்  விக்ரம். உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிறகு  நடிப்பிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஒரு நடிகர். இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து  பா ரஞ்சித் இயக்கத்தில் தங்களான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஞானவேல் ராஜா கிரீன் ஸ்டுடியோ சார்பாக  தயாரிக்கும் இந்த திரைப்படத்தில்  விக்ரமுடன் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன்  உள்ளிட்டு ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கேஜிஎஃப் தங்க சுரங்கங்களில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளதாக ரஞ்சித் தெரிவித்திருந்தார்.

tamilcinema

118 நாட்கள் நடைபெற்ற இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து சூட்டிங் ஸ்பாட்  புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் விக்ரம்  தன்னுடைய கனவை நினைவாக்கிய பா. ரஞ்சித்திற்கு நன்றி என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த  நடிகை பார்வதியுடன் முதல் நாள் சூட்டிங் போது எடுத்த புகைப்படம் மற்றும் கடைசி நாள் சூட்டிங் என்பது எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டு இருக்கிறார். பா.ரஞ்சித்துடன் எடுத்த புகைப்படத்தையும்  பகிர்ந்துள்ளார் விக்ரம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மறக்க முடியாத அனுபவம் என்றும்  இதற்காக பா ரஞ்சித்திற்கு கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார் விக்ரம்.