அடக்கொடுமையே.. பிரபல தமிழ் இசையமைப்பாளர் அரியவகை நோயால் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகினர், ரசிகர்கள்.!!



tamil famous director dead

தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக வலம்வந்த ரகுராம் அரியவகை நோயால் திடீரென மரணமடைந்துள்ளார். இதனால் திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகியிருந்த திரைப்படம் ஒரு கிடாயின் கருணை மனு. ஜெயராஜ், ஜார்ஜ் மரியான், விதார்த், ரவீனா ரவி உட்பட பல நடிகர்களும் நடித்திருந்த நிலையில், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. 

இப்படத்திற்கு ரகுராம் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் மூலமாக இவர் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானதை தொடர்ந்து சில திரைப்படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், அவர் அரியவகை நோயால் இறந்துள்ளார் என்ற தகவல் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

Famous director

சமீபகாலமாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த இவர், சிறுவயதிலேயே ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் சிகிச்சையும் பெற்று வந்திருக்கிறார். அத்துடன் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக உடல்நலகுறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரகுராம் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது. 

இருப்பினும் சிகிச்சை பலனின்றி திடீரென ரகுராம் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு 38 வயதாகுவதை தொடர்ந்து, இவரது மறைவிற்கு திரையுலகினர் முதல் ரசிகர்கள் வரை பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.