"சூர்யா குடும்பத்தினரின் புதிய முடிவால் கோலிவுட்டில் சலசலப்பு!"
"சூர்யா குடும்பத்தினரின் புதிய முடிவால் கோலிவுட்டில் சலசலப்பு!"
1997ம் ஆண்டு "நேருக்கு நேர்" திரைப்படத்தில் அறிமுகமானவர் சூர்யா. இவரது தம்பி கார்த்தியும் அமீர் இயக்கத்தில் வெளியான "பருத்திவீரன்" படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர்கள் இருவரும் நடிகர் சிவக்குமாரின் மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சூர்யா 2006ம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்போது தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். ஜோதிகா அஜித் நடித்த "வாலி" படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் தான் முதலில் அறிமுகமானார்.
இதையடுத்து காக்க காக்க, பேரழகன், பூவெல்லாம் கேட்டுப்பார், மாயாவி உள்ளிட்ட படங்களில் சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். ஆரம்பத்திலிருந்தே ஜோதிகாவுக்கு மேலாளராக இருந்தவர் தங்கதுரை. இவர் மூலம் சூர்யாவின் நட்பு கிடைத்து அவருக்கும் மேலாளராக பணியாற்றினார்.
இதைத் தொடர்ந்து சூர்யா, கார்த்தி, ஜோதிகா, ஷங்கர், அதிதி ஷங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு மேலாளராக பணியாற்றி வந்த தங்கதுரையை, தற்போது சூர்யா குடும்பத்தில் உள்ள மூவரும் தங்கள் மேலாளர் பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.