பள்ளிக் குழந்தைகளுடன் மனம்விட்டு பேசிய பாடகர் எஸ்.பி.பி.! வைரல் வீடியோ.!

பள்ளிக் குழந்தைகளுடன் மனம்விட்டு பேசிய பாடகர் எஸ்.பி.பி.! வைரல் வீடியோ.!


spb talking with school students

பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனோ தொற்றால் கடந்த மாதம் 5ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இந்திய திரை இசையின் முக்கிய அடையாளமாக இருந்த பாடகர் எஸ்.பி.பி. மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் மரணம் குறித்தான தகவல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, மறுநாள் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது வரை அவரது இசை ஊடகங்கள் மற்றும் மக்கள் மனதில் ஒலித்துக்கொண்டிருந்தது. எஸ்.பி.பியின் உடல் அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க, சென்னையை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணைவீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 


அதனை தொடர்ந்து பலரும் எஸ்.பி.பியின் அரிய புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் நெகிழ்ச்சி சம்பவங்களை பகிர்ந்து அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்தநிலையில் சன் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் அவர் பள்ளிக் குழந்தைகளுடன் உரையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அவர் அந்த வீடியோவில் தனது குடும்பம், பள்ளி-கல்லூரி வாழ்கை என பலவற்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.