எஸ்.பி.பி மறைவிற்கு இரங்கல் தெரிவித்தாரா தல அஜித்! கிளம்பிய சர்ச்சை! காட்டமாக பதிலளித்த எஸ்.பி.பி சரண்!

எஸ்.பி.பி மறைவிற்கு இரங்கல் தெரிவித்தாரா தல அஜித்! கிளம்பிய சர்ச்சை! காட்டமாக பதிலளித்த எஸ்.பி.பி சரண்!


spb-charan-answered-to-ajith-mourn-to-spb

பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 5ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் அவரது மறைவிற்கு இந்திய அளவில் திரைப் பிரபலங்கள்,  ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். மேலும் நடிகர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி எஸ்.பி.பி யின் மகன் சரணுக்கு ஆறுதல் கூறினார்.. இந்நிலையில் நடிகர் அஜித் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை எனவும், அவர் இரங்கல் தெரிவித்து அறிக்கை எதுவும் வெளியிடவில்லை எனவும் சர்ச்சைகள் கிளம்பியது. 

Ajith

இதுகுறித்து எஸ்பிபி சரணிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்டபோது அவர், அஜித்  என்னுடைய நெருங்கிய நண்பர். அப்பாவின் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவர் வந்து பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் தற்போது அது பிரச்சினை இல்லை. இந்த மாதிரி சூழலில் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை.

மேலும் அஜித் என்னிடம் போனில் பேசினாரோ, இல்லையோ?  அதெல்லாம் இப்பொழுது பெரிய விசயமாக்க தேவையில்லை. என் அப்பா தற்போது உலகில் இல்லை. அனைவரும் இந்த வருத்தத்திலிருந்து மீண்டு வர நேரம் தேவைப்படுகிறது. எங்கள் குடும்பத்தினர் மீது கொஞ்சம் கருணை காட்டுங்கள் என கூறியுள்ளார்.