அட.. நடிகர் சிம்பு இப்படி மாறிட்டாரே! எல்லாம் கல்யாணத்துகாகவா!! தீயாய் பரவும் புகைப்படம்!!

அட.. நடிகர் சிம்பு இப்படி மாறிட்டாரே! எல்லாம் கல்யாணத்துகாகவா!! தீயாய் பரவும் புகைப்படம்!!


simbu-pray-varanasi-temple

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தனது சுட்டித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் சிம்பு.  பின்னர் ஹீரோவாக களறங்கிய அவர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தார். இந்நிலையில் நாளடைவில் சிம்பு உடல் எடை அதிகரித்த நிலையில் அவருக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. அதனால் அவர் தீவிர உடற்பயிற்சியை மேற்கொண்டு தனது உடல் எடையை குறைத்தார்.

அதனை தொடர்ந்து சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது. பின்னர் அவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.  மேலும் சிம்பு ஜில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்திலும், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் சிம்பு திடீரென உத்திரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்று, அங்கு கங்கை ஆற்றில் தீபம் ஏற்றி வழிபட்டுள்ளார். அந்தப் புகைப்படங்களை அவர் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட ரசிகர்கள் சிம்புவா இது! இப்படி மாறிட்டிங்களே! திருமணத்திற்கான பரிகாரமா? என கேட்டு வருகின்றனர்.