தமிழ் சினிமாவிற்கு வந்து பல வருடங்களானாலும் அந்த விஷயத்தை மட்டும் கத்துக்கவே முடியல.. ஸ்ரேயா சரண் உருக்கம்.!

தமிழ் சினிமாவிற்கு வந்து பல வருடங்களானாலும் அந்த விஷயத்தை மட்டும் கத்துக்கவே முடியல.. ஸ்ரேயா சரண் உருக்கம்.!



shreya-talked-about-cant-speak-fluently-in-tamil

தென்னிந்திய திரைத்துறையில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்திருக்கிறார். தமிழில் 2003 ஆம் ஆண்டு வெளியான 'எனக்கு 20 உனக்கு 18' திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

shreya

இதன்பின் மழை, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி, புலி, சிக்கு புக்கு போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்களின் மனதை கவர்ந்தார். பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு உருசியா நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் கொஸ்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்  ஸ்ரேயா.

இதுபோன்ற நிலையில், தற்போது கன்னட மொழியில் வெளியாகவிருக்கும் 'கப்ஜா' என்ற படத்தில் மீண்டும்  கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது ஸ்ரேயாவிடம் பத்திரிக்கையாளர் இவ்வளவு வருடம் தமிழ் சினிமாவில் இருந்தும் நீங்கள் ஏன் தமிழ் பேசவில்லை என்று கேள்வி கேட்டார்.

shreya

அதற்கு பதிலளித்த ஸ்ரேயா சரண் எனக்கு ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகள் தெரியும். ஆனால் ஒழுங்காக பேச தெரியாது என்று என் நண்பர்கள் என்னை கிண்டல் செய்வார்கள். அதே போல் தான் தமிழும் எனக்கு மொழிகளை கற்றுக் கொள்வது சிரமமாக இருக்கும் என்று வெளிப்படையாக பதிலளித்து இருக்கிறார்.