ஊரடங்கு நேரத்தில், நடுரோட்டில் நடிகை ஸ்ரேயா கணவருடன் செய்த காரியத்தை பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதனை தொடர்ந்து அவர் ரஜினி, விஜய், விக்ரம், ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் குறைந்த காரணத்தால் பிரபல தொழிலதிபருமான ஆன்ட்ரே கோஷ்சியை காதலித்து மணந்தார். திருமணத்துக்கு பிறகு ஸ்ரேயா கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வருகிறார்.
மேலும் சமீபத்தில் ஸ்ரேயாவின் கணவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததாகவும், தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் ஸ்ரேயாவும் அவரது கணவரும் பார்சிலோனா நகரில் நடுரோட்டில் மாஸ்க் எதுவும் அணியாமல் நடனம் ஆடியுள்ளனர்.
மேலும் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டான்ஸ் மாஸ்டர்களுக்கு நன்றிகூறி வெளியிட்டுள்ளார்.பார்சிலோனாவில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஸ்ரேயா நடுரோட்டில் கணவருடன் நடனமாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.