காதல் விவகாரம் குறித்து மனம் திறந்த ஷிவானி நாராயணன்.. என்ன கூறினார் தெரியுமா?.!

காதல் விவகாரம் குறித்து மனம் திறந்த ஷிவானி நாராயணன்.. என்ன கூறினார் தெரியுமா?.!


Shivani Narayanan about Love

 

சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்த சிவானி நாராயணன் பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டதற்கு பின்னர் தமிழக அளவில் மேலும் அடையாளப்படுத்தப்பட்டார். 

இந்த ஷோவுக்கு பின்னர் சினிமாவில் நடிக்காத அவர் விக்ரம் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரமான விஜய் சேதுபதிக்கு மூன்று மனைவிகளில் ஒரு மனைவியாகவும் நடித்து இருந்தார்.

Shivani Narayanan

இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்புகள் எளிதாக அமைந்துவிட்டாலும் சினிமாவில் அவை கிடைக்கவில்லை. மேலும் சமீபத்திய பேட்டியில் உங்கள் காதல் திரைப்பயணத்தில் பாதிப்பை ஏற்படுத்தியதா? என கேட்டனர். 

அவரது பிக்பாஸ் காதல் பற்றி மறைமுகமாக கேட்டதற்கு பளிச்சென பதிலளித்த சிவானி, "எனது காதல்தான் எனது பயணத்தை தொடங்கி வைத்தது. சினிமா மீதான எனது காதல்தான் அது" என்று கூறினார்.