தலைவர், தளபதி, அனிருத்.. 30 நாட்களும் வேற லெவல்.! செம ஹேப்பியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்.! ஏன்னு பார்த்தீங்களா!!



sharukhan-tweet-about-experience-in-chennai

தமிழ் சினிமாவில் ராஜாராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக என்ட்ரி கொடுத்தவர் அட்லி. அவர் தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தனக்கென தனிஇடத்தை பிடித்தார். அதனை தொடர்ந்து அவர் தளபதி விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். 

இதனை தொடர்ந்து அட்லீ தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா, பிரியாமணி, விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் அப்படத்தில் நடிகர் விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாரூக்கான் தனது டிவிட்டர் பக்கத்தில், தலைவர் ரஜினிகாந்த் ஷூட்டிங் செட்டிற்கு வந்து ஆசீர்வதித்தார். பின் நயன்தாராவுடன் இணைந்து படம் பார்த்தது, அனிருத்துடன் பார்ட்டி, தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதியுடன் உரையாடியது. அட்லியும், பிரியாவும் அருமையான உணவு கொடுத்தது என 30 நாட்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் தற்போது சிக்கன் 65 தயார் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்