"திருமணத்திற்கு முன்னால் மேட்டர் செய்வதில் எந்த தவறும் இல்லை..." யாஷிகா ஆனந்த் மீண்டும் சர்ச்சை பேட்டி.!

"திருமணத்திற்கு முன்னால் மேட்டர் செய்வதில் எந்த தவறும் இல்லை..." யாஷிகா ஆனந்த் மீண்டும் சர்ச்சை பேட்டி.!



sharig-intimate-relation-before-marriage-is-nothing-wro

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். எனினும் 2018 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டதன் மூலம்  ரசிகர்களால் பெரிதும் அறியப்பட்டவர்.

இவர் துருவங்கள் பதினாறு திரைப்படத்தை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து,  நோட்டா மற்றும் கழுகு 2 போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கவர்ச்சியான மற்றும் வில்லங்கமான கதாபாத்திரங்களுக்கு பெயர் போனவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

tamil cinemaஎப்போதுமே சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் இவர் தனது சமூக வலைதளங்களில் மூலமும் பேட்டிகளில் மூலமும் சர்ச்சையான கருத்துக்களை கூறி வருபவர். தற்போது இவரது கருத்து ஒன்று பெரும் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது .

tamil cinemaசமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் மீண்டும் சர்ச்சையான கருத்துக்களை  கூறியிருக்கிறார் யாஷிகா ஆனந்த். அந்தப் பெட்டியில் பேசி இருக்கும் இவ்வாறு திருமணத்திற்கு முன்பே உடலுறவு வைத்துக் கொள்வதில் தவறு ஏதும் இல்லை என தெரிவித்திருக்கிறார். திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்வதை பலரும் தவறாக நினைக்கின்றனர். திருமணத்திற்கு முன்பு கன்னித்தன்மையை இழப்பது பெரிய தவறு ஒன்றுமில்லை. இதை சொல்வதற்காக என் மீது கடுமையான கருத்துக்கள் கூறப்பட்டாலும் அதைப் பற்றி நான் சிறிதும் கவலைப்பட போவதில்லை என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.