வீட்டிற்குள் வந்ததுமே கொளுத்திப் போட்டு சேரனின் மகள் செய்த காரியம்!! இனி அவ்ளோதானா? வீடியோ இதோ..



seran family entering bigboss house

பிக்பாஸ் சீசன் மூன்று 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு, மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்ஷண், வனிதா ஆகியோர் மட்டுமே உள்ளனர் . மேலும் கடந்த வாரம் சீக்ரட் ரூமில் அடைக்கப்பட்ட சேரன் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர பலருக்கும் சந்தோசம் ஏற்பட்டது. 

இந்நிலையில் நேற்றைக்கு முந்தையநாள் முதல் புதிய டாஸ்க் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர். அதன்படி கடந்த நாட்களில் முகேன் மற்றும் லாஸ்லியாவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

Cheranஅதனை தொடர்ந்து இன்று தர்சன் அம்மா மற்றும் தங்கை, வனிதாவின் குடும்பத்தார்கள் வருகை தரவுள்ளனர். அதுமட்டுமின்றி சேரனின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளனர். அப்பொழுது சேரன் மகள் அவரிடம் லாஸ்லியாவிடம் பேசவேண்டாம். அவ உங்கள் மீது அன்பாக இல்லை. அந்த 5 பேரில் 2 பேரை விட்டுருங்க. லாஸ்லியாவிடம் பேசினால் நான் இனிமேல் உங்களிடம் பேச மாட்டேன் என கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.