என்னது.. இது உண்மையா?? செம்பருத்தி சீரியல் குறித்து காட்டுத்தீயாய் பரவி வரும் தகவல்! செம ஷாக்கில் ரசிகர்கள்!!

என்னது.. இது உண்மையா?? செம்பருத்தி சீரியல் குறித்து காட்டுத்தீயாய் பரவி வரும் தகவல்! செம ஷாக்கில் ரசிகர்கள்!!



semparuthi serial going to end soon news viral

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வித்தியாசமாக மாறுபட்ட கதையம்சத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, செம்ம ஹிட்டாகி டிஆர்பியில் முன்னணியில் வந்து ஒளிபரப்பான தொடர் செம்பருத்தி. இத்தொடருக்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இத்தொடரில் ஆரம்பத்தில் ஹீரோவாக, ஆதி கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் மற்றும் பார்வதியாக ஷபானா ஆகிய இருவரும் நடித்து வந்தனர். ஆனால் திடீரென நடிகர் கார்த்திக் ராஜ் ஒரு சில காரணங்களால் அந்த தொடரிலிருந்து விலகிய நிலையில் தற்போது ஆதியாக தொகுப்பாளராக அகினி நடித்து வருகிறார். இந்த தொடர் தற்போது சுவாரசியமாக, விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. ஆனால் முன்பு இருந்த அளவிற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பவில்லை என கூறப்படுகிறது.

semparuthiஇந்த நிலையில் திடீரென தற்போது செம்பருத்தி சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போவதாக இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளப் பக்கங்களில், ரசிகர்களின் தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் செம்பருத்தி சீரியல் குழுவிடமிருந்து இதுகுறித்த அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை. எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. மேலும் சிலர் தற்போதுதான் திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. இப்போதைக்கு அந்த தொடர் முடிய வாய்ப்பில்லை எனவும் கூறி வருகின்றனர்.