ஓ.. அப்போ அது உண்மைதானோ!! ராஜாராணி 2 சீரியலிலிருந்து திடீரென அர்ச்சனா விலக இதுதான் காரணமா??

ஓ.. அப்போ அது உண்மைதானோ!! ராஜாராணி 2 சீரியலிலிருந்து திடீரென அர்ச்சனா விலக இதுதான் காரணமா??


Reason for Archana releaving from rararani 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கும் தொடர் ராஜா ராணி 2. இதில் ஹீரோவாக சரவணன் கதாபாத்திரத்தில் சித்து மற்றும் சந்தியாவாக ரியா என்பவர் நடித்து வருகிறார். மேலும் ராஜாராணி 2 தொடரில் வில்லியாக நடித்து அனைவர் மத்தியிலும் பெருமளவில் பிரபலமடைந்தவர் அர்ச்சனா.

இந்த தொடரில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. காமெடியான அவரது பேச்சும், வில்லத்தனமான பார்வையும் ரசிகர்களை கவர்ந்தது. அவருக்கு ரசிகர்களும் உருவாகினர். இந்நிலையில் திடீரென  நடிகை அர்ச்சனா ராஜாராணி 2 சீரியலிலிருந்து விலகினார். அவருக்கு பதில் தற்போது ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து பிரபலமடைந்த அர்ச்சனா குமார் நடித்து வருகிறார்.

Archana

இதற்கிடையே அர்ச்சனா பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்பதற்காகதான் ராஜா ராணி 2 சீரியலிலிருந்து விலகியதாக தகவல்கள் பரவியது. இந்நிலையில் சீரியலிலிருந்து விலகியது குறித்து அர்ச்சனா கூறுகையில், “ராஜா ராணி 2 சீரியலில் 3 வருடத்திற்கு மேல் நடித்துவிட்டேன். தற்போது என் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக அதிலிருந்து விலகிவிட்டேன். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், கலந்துகொள்கிறேனா? இல்லையா? என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும், பொறுத்திருந்து பாருங்கள் என கூறியுள்ளார்.