தனது அக்காவை மோசமாக பேசிய ஆரி ரசிகர்களுக்கு கடுப்பாகி ரம்யா பாண்டியன் தம்பி விடுத்த வேண்டுகோள்!

தனது அக்காவை மோசமாக பேசிய ஆரி ரசிகர்களுக்கு கடுப்பாகி ரம்யா பாண்டியன் தம்பி விடுத்த வேண்டுகோள்!


ramya-pandian-brother-request-to-aari-fans

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் நடிகை ரம்யா பாண்டியன். ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒரு தனிரசிகர் பட்டாளமே உருவானது. மேலும் ரம்யா பாண்டியனின் சில செயல்பாடுகளால் அவரை சிலர் மோசமாக விமர்சனம் செய்தும் வருகின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக ரம்யா பாண்டியன் சக போட்டியாளரான ஆரியை டார்கெட் செய்வதாகவும், அவரை மறைமுகமாக கேலி செய்து பேசுவதாகவும் ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். 

 இந்நிலையில் தனது அக்காவை மோசமாக திட்டி வரும் ஆரியின்  ரசிகர்களுக்கு நடிகை ரம்யா பாண்டியன் சகோதரர் சமூக வலைதளப் பக்கத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் ஒரு பெண் என்று கூட பாராமல் எனது அக்கா ரம்யா பாண்டியனுக்கு எதிராக ஆரியின் ரசிகர்கள் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். நடிகர் ஆரி வெளியே வந்தால் அவரது ரசிகர்களின் செயலால் கண்டிப்பாக மகிழ்ச்சி அடைய மாட்டார் பெருமைப்படவும் மாட்டார். சமூக சேவைகள் செய்து வரும் நடிகர் ஆரி மீது எனக்கு பெரிய மரியாதை உள்ளது. 

aari

பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரியின் ரசிகர்கள் பொழுதுபோக்கிற்கான ஒரு கேம் ஷோவாக பார்க்க வேண்டும். இந்த போட்டியில் திறமையான ஒருவர் வெற்றி பெறுவார். மேலும் பொறுமையாக பார்த்து வரும் ரம்யா பாண்டியன் ரசிகர்களுக்கு மிக்க நன்றி என கூறியுள்ளார்.