குவியும் வாழ்த்துக்கள்! விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினி வெளியிட்ட அறிக்கை! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!

குவியும் வாழ்த்துக்கள்! விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினி வெளியிட்ட அறிக்கை! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!



rajini-thanks-report-for-announcing-award

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகர் ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று இந்திய திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் நடிகர் ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து நடிகர் ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் இந்தியத் திரையுலகின் மிக உயரிய தாதா சாஹேப் பால்கே விருதை எனக்கு வழங்கிய மத்திய அரசிற்கும், மதிப்பிற்குரிய பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் என்னில் இருந்த நடிப்புத் திறமையை கண்டுபிடித்து என்னை ஊக்குவித்த என்னுடைய பேருந்து ஓட்டுநரான நண்பன் ராஜ் பகதூருக்கும் வறுமையில் வாடும் போதும் என்னை நடிகனாக்க பல தியாகங்கள் செய்த என் அண்ணன் திரு.சத்யநாராயணா ராவ் கெய்க்வாட் அவர்களுக்கும், என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்து, இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது குருநாதர் திரு K.பாலச்சந்தர் அவர்களுக்கும், திரையுலக தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஊடகங்கள், மற்றும் என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கும் உலகெங்கிலும் உள்ள எனது ரசிக பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.

என்னை மனமார்ந்து வாழ்த்திய மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் மதிப்பிற்குரிய துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய எதிர் கட்சித் தலைவர் நண்பர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், நண்பர் கமல் ஹாசன் அவர்களுக்கும் மத்திய மாநில அரசியல் தலைவர்களுக்கும், நண்பர்களுக்கும் திரையுலக நண்பர்களுக்கும் என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.