அரசியல் குடும்பத்தில் இணைந்த பிரியங்கா.! அவரது கணவர் குறித்து வெளிவந்த முக்கிய பின்னணி!!

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபல முன்னணி தொகுப்பாளினியாக இருந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பிரபலமாக இருப்பவர் பிரியங்கா. இவர் பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றிருந்த நிலையில் பிரியங்காவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வசி என்பவருடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றது.
பிரியங்காவுக்கு இரண்டாவது திருமணம்
புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் யார் அந்த வசி? என தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர். இந்நிலையில் வசி, பிரபல பப் மற்றும் கிளப்புகளில் டிஜேவாக உள்ளார், ஈவண்ட் மேனேஜ்மென்ட் ஒன்றை நடத்தி வருகிறார் என சமூக வலைதளங்களில் அவரைக் குறித்து பல தகவல்கள் பரவி வந்தது.
அரசியல் குடும்ப பின்னணி
இந்த நிலையில் தற்போது வசி குறித்து மற்றொரு முக்கியமான தகவல்
பரவி வருகிறது. வசி இலங்கை வாழ் தமிழராம். இவரது குடும்பம் இலங்கை திரிகோணமலையில் வசித்து வருகிறது. மேலும் அவர் இலங்கை வாழ் தமிழர்களிடையே பெரும் ஆதரவை பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த, இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மறைந்த இரா.சம்பந்தனின் தங்கையின் மகனாம். தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கலைநிகழ்ச்சிக்காக சின்னத்திரை நட்சத்திரங்கள் செல்வர். அவ்வாறு சென்ற போதே பிரியங்காவுக்கு வசியின் நட்பு கிடைத்து, பின் காதலாகி திருமணத்தில் முடிந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தொகுப்பாளினி பிரியங்கா திருமணம் செய்துள்ள வசி யார் தெரியுமா?? இருவருக்கும் வயது வித்தியாசம் இவ்வளவா!!
இதையும் படிங்க: விஜய் டிவி பிரியங்காவிற்கு திடீரென முடிந்த இரண்டாவது திருமணம்.! மாப்பிள்ளை இவர்தான்.. அவரே வெளியிட்ட பதிவு.!