இயக்குனர் கொடுத்த தொல்லையால் தற்கொலைக்கு முயற்சி,கண்ணீருடன் மனம் திறந்த நடிகை .!

பிரபல தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் பொன்மகள் வந்தாள் இந்த சீரியலில் ஆயிஷா நாயகியாக அறிமுகமானார். இந்நிலையில் அவர் திடீரென நீக்கப்பட்டு மேக்னா நாயகியாக கமிட் ஆகியுள்ளார்.
ஏன் இந்த திடீர் மாற்றம் என ஆயிஷாவிடம் கேட்டதற்கு அவர் எனக்கும் இயக்குனருக்கும் சில பிரச்சனைகள் இருக்கிறது. ஒருநாள் படப்பிடிப்பில் உடை அணிந்து கொண்டிருக்கும் போது இயக்குனர் திடீரென்று கதவை திறந்து உள்ளே வந்துவிட்டார்,மேலும் எல்லோரும் வந்துவிட்டனர்.
இதனால் ரொம்ப அசிங்கமாகிவிட்டது. என் அறை கதவை மூடிக்கொண்டு நான் சத்தமாக அழுதேன், ஒருகட்டத்தில் தற்கொலை செய்ய கூட முயற்சி செய்தேன் என்று நடிகை கூறுகிறார்.
ஆனால் இயக்குனரோ அவருக்காக நான் இந்த சீரியலில் நிறைய அட்ஜஸ்ட் செய்திருக்கிறேன், அவருக்கு சரியாக நடிப்பு கூட வரவில்லை ஆனால் ஒவ்வொரு முறையும் பொறுமையாக கற்றுக் கொடுத்து படமாக்குவேன்.
எனது மகள் போல் அவரை பார்த்துக் கொண்டேன். ஆனால் அவரோ என் மேல் புகார் தெரிவித்திருக்கிறார். சீரியலில் நாயகி மாற்றப்படுவது இயக்குனர் கையில் இல்லை, தயாரிப்பு நிறுவனமும், தொலைக்காட்சியும் பேசி தான் முடிவு எடுத்தார்கள், என் மீது எந்த தவறும் இல்லை என கூறியுள்ளார்.