சண்டாள பாவிகளா., வான்னு வம்படியா கூட்டிட்டு போயி கன்னத்துலயே அறஞ்சிட்டாரு - மாரி செல்வராஜ் குறித்து பரியேறும் பெருமாள் நடிகர் பேச்சு..!!

சண்டாள பாவிகளா., வான்னு வம்படியா கூட்டிட்டு போயி கன்னத்துலயே அறஞ்சிட்டாரு - மாரி செல்வராஜ் குறித்து பரியேறும் பெருமாள் நடிகர் பேச்சு..!!



pariyerum-perumal-movie-actor-thangaraj-speech

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான படம் பரியேறும் பெருமாள். இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்து வழங்கியிருந்தார். படத்தில் கதிர், ஆனந்தி, யோகிபாபு உட்பட பலரும் நடித்திருந்தனர். 

பரியேறும் பெருமாள் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும் பெற்றிருந்த நிலையில், இது மாரி செல்வராஜின் முதல் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படம் பல விருதுகளையும் வென்றது. இந்த படத்தில் கதாநாயகனின் தந்தையாக நடித்தவர் நடிகர் தங்கராஜ்.

இவர் படத்தில் கலைக்கூத்தாடியாக நடித்திருந்த நிலையில், கூற்றுகளில் பெண் வேடம் போடப்பட்டு ஆடுவதால் நிஜத்திலும் பெண் போன்ற நயனத்தை கொண்டிருப்பதாக கதையம்சம் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த படத்தில் நடிப்பது குறித்து நடிகர் தங்கராஜ் பேசுகையில், "நான் வெள்ளரிதோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். 

அப்போது 30-க்கும் மேற்பட்டோர், இயக்குனர் மாரி செல்வராஜுடன் வந்து என்னை அழைத்துச்சென்றனர். நான் முதலில் நடிக்கவரமாட்டேன் என்று கூறியிருந்தேன். ஆனாலும் அவர்கள் என்னை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர். ஒரு காட்சியை படம் எடுக்கும்போது எனக்கு சரியாக நடிப்பு வராததால், மாரி செல்வராஜ் என்னை கோபப்பட்டு கன்னத்தில் பளாரென அறைந்துவிட்டார். 

நான் சண்டாள பாவி நடிக்க வரமாட்டேன் என்று தானே சொன்னேன். என்னை கட்டாயப்படுத்தி கூப்பிட்டு வைத்து, அடித்து கொல்றீங்களே என்று புலம்பினேன். அதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் என்னிடம் வருத்தம் தெரிவித்து பேசினார். நான் சொல்வதை அப்படியே செய்யுங்கள். 

நீங்கள் நாடகத்தில் நடித்து பெயர் வாங்கிவிட்டீர்கள். தற்போது உலகம் முழுவதும் உங்களின் பெயர் செல்ல வேண்டும். அதற்காக நான் கூறுவது போல நீங்கள் நடிக்கவேண்டும். நான் உங்களின் சொந்தக்காரன் தான். 

எதையும் நினைத்துக் கொள்ள வேண்டாம் என்று ஆசுவாசப்படுத்தியதை தொடர்ந்து, நான் அந்த காட்சியை நடித்துக் கொடுத்தேன்" என்று தெரிவித்தார். இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.