"இயக்குனரை விட கமல் சார் தான் அந்த விஷயத்தில் சூப்பர்" பாபநாசம் பட நடிகையின் பேட்டி..

மலையாள நடிகையான ஆஷா சரத், 2012ம் ஆண்டு "ஃப்ரைடே" படம் மூலம் அறிமுகமானார். இவர் ஒரு பரதநாட்டியக் கலைஞரும் கூட. அதோடு மலையாள சீரியல்களிலும் நடித்து பிரபலமடைந்தவர்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான மலையாள படம் "த்ரிஷ்யம்". இதில் வில்லியாக நடித்திருந்தார் ஆஷா சரத். இந்தப் படம் தமிழில் "பாபநாசம்" என்ற பெயரில் எடுக்கப்பட்டது. இதில் கமல், கௌதமி, நிவேதா தாமஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
"த்ரிஷ்யம்" படத்தில் ஆஷா சரத்தின் நடிப்பை பார்த்த கமல், பாபநாசத்திலும் அந்த வில்லி ரோலில் அவரையே நடிக்க வைத்தார். மேலும் கமல் நடித்த "தூங்கா வனம்" படத்திலும் கமலுக்கு மனைவியாக நடிக்க வைத்தார். இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் ஆஷா சரத் கூறியிருந்தார்.
"கமல் சார் ஒரு நடிப்பு அரக்கன் என்று எல்லோரும் சொல்வார்கள். அவருடன் நடித்த போதுதான் நான் அதை தெரிந்துகொண்டேன். இயக்குனர் காட்சியை விளக்கினாலும், கமல் சார் விளக்கி கூறுவதை கவனித்தாலே போதும். இயக்குனரை விட கமல் சார் தான் சூப்பராக விளக்கி கூறுவார்" என்று ஆஷா சரத் கூறியுள்ளார்.