முதன்முதலாக தமிழ் சினிமாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார், எஸ்.ஜே சூர்யாவுடன் இணைகிறார்; யார் தெரியுமா?

முதன்முதலாக தமிழ் சினிமாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார், எஸ்.ஜே சூர்யாவுடன் இணைகிறார்; யார் தெரியுமா?


ouyarntha-manithan---sj-surya---director---tamilvanan

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம்தான் பிங்க். அந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கான நேர் கொண்ட பார்வையில் தல அஜித் தீவிரமாக நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் நேரடியாக களம் காண்கிறார் அமிதாப் பச்சன்.

1969 ஆம் ஆண்டு ஷாத் ஹிந்துஸ்தானி என்ற பாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமானவர் அமிதாப் பச்சன். தற்போது 50 ஆண்டுகள் கடந்த நிலையில் பிரபல தமிழ் நடிகர் எஸ்.ஜே சூர்யா உடன் இணைந்து 'உயர்ந்த மனிதன்' என்ற படத்தில் நடிக்கிறார். தமிழ் மற்றும் ஹிந்தி என்று இரு மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை கள்வனின் காதலி படத்தை இயக்கிய இயக்குனர் தமிழ்வாணன் இயக்குகிறார்.



 

அமிதாப்பச்சனுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து இப்படத்தின் இயக்குனர் மற்றும் எஸ்.ஜே சூர்யா இருவரும் தங்களது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை எஸ்.ஜே. சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், என் வாழ்க்கையின், சந்தோஷமான தருணம் இது. இதுவரை நான் கண்டிராத கனவை நினைவாக்கிக் கொடுத்த கடவுள், அப்பா, அம்மாவுக்கு நன்றி. பாலிவுட்டின் சூப்பர் அமிதாப் பச்சன் அவர்களுக்கும் நன்றி. எனது இந்த மகிழ்ச்சியை நான், ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.



 

இப்படம் குறித்து இயக்குனர் தமிழ் வாணன் கூறுகையில், எனது கனவு நிறைவேறியது. இதை விட நான் வேறு என்ன கேட்டு பெற்றிட முடியும். பாலிவுட் திரையுலகைன் முடிசூடா மன்னன் அமிதாப் பச்சன் உடன் பணியாற்றியது மிகப்பெரிய பாக்கியம். எனது இயக்கத்தில் தான் இவரது முதல் படம் என்பது பெரிய பெருமை என்று குறிப்பிட்டுள்ளார்.