கோபத்தில் வெளியேறும் ஜனனி! என்ன நடந்தது தெரியுமா?



Out of janani! Do you know what happened?

தற்போது சின்னத்திரையில் தமிழகம் எங்கும் பரபரப்பாக பேசக்கூடிய ஒரே நிகழ்ச்சி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிதான். இது போன ஆண்டு தான் தமிழில் ஆரம்பிக்க பட்டது. போன ஆண்டு சீசன் 1 நல்ல முறையில் முடிந்தது. அந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்துவழங்கினார்.

இதனை தொடந்து இந்த பிக்பாஸ் சீசன் 2 சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்க பட்டது. இந்த நிகழ்ச்சியிலும் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கிறார். இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆனால் தற்போது வெறும் 6 போட்டியாளர்கள் தான் இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆறு நபரில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கேட்டால் ஒருவரிடமும் பதில் வராது.

இன்று வெளியான புரோமோ ஒன்றில் ஐஸ்வர்யா எல்லோரிடமும் வழக்கம் போல் சண்டை போடுகிறார். அதற்கு அடுத்த புரோமோ ஒன்றில் பிக்பாஸ் இந்த போட்டியில் ஜெயிக்க உங்களுள் யார் தகுதியானவர்கள் என்று போட்டியாளர்களிடம் நிரூபிக்க சொல்கிறார்.

அதில் ஜனனி ஒன்று சொல்ல யாஷிகா நான் தான் உங்களை விட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து அதிக போட்டிகளில் கலந்து கொண்டது நான் தான் எனவே இந்த பிக்பாஸ் பட்டம் பெற நான் தகுதியானவர் என்று கூறுவது போலவும் அதை கேட்ட உடன் ஜனனி அந்த இடத்தில இருந்து கோபமாக வெளியேறுவது போலவும் காட்டினார்.