நடிகையுடன் ஊர்ஊராக சுற்றி உல்லாசம்.. கரம்பிடிப்பதாக அடிமடியில் கைவைத்த கட்டுமான அதிபர்.. கதறும் நடிகை..!!

நடிகையுடன் ஊர்ஊராக சுற்றி உல்லாசம்.. கரம்பிடிப்பதாக அடிமடியில் கைவைத்த கட்டுமான அதிபர்.. கதறும் நடிகை..!!



Mumbai Bandra Actress Raped by Business Man

திருமணம் செய்துகொள்வதாக கூறி கட்டுமான அதிபர், நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

மும்பையில் உள்ள பாந்திராவை சேர்ந்த 24 வயது இளம்பெண் குறும்பட நடிகையாக இருக்கிறார். இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள நிலையில், கப்பரேடு பகுதியைச் சேர்ந்த கட்டுமான அதிபரான ஆதித்யா கபூர் என்பவரிடம் அறிமுகம் ஏற்பட்டது.

முதலில் இருவரும் நட்பாக பழகி வந்ததை தொடர்ந்து, தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர். நாளடைவில் நடிகையுடன், கட்டுமான அதிபர் நெருக்கமாக பழகினார். மேலும் நடிகையை திருமணம் செய்து கொள்வதாக கூறி தனது வீடு மற்றும் கோவா போன்ற இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

நடிகையும் வருங்கால கணவர் என நினைத்து ஆதித்யா கபூர் அழைத்த இடங்களுக்கெல்லாம் சென்றுள்ளார். இந்த நிலையில் நடிகை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வற்புறுத்திய நிலையில், உல்லாசத்திற்கும் மறுப்பு தெரிவித்தார். இது கட்டுமான அதிபரான ஆதித்யா கபூருக்கு ஆவேசத்தை உண்டாக்கியது. 

Mumbai

இதனால் ஆபாசமான குறுந்தகவலை நடிகை உட்பட குடும்பத்தினருக்கு அனுப்பி கொலை செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளார். மன உளைச்சலடைந்த நடிகை இந்த சம்பவம் குறித்து என்.எம். ஜோஷி மார்க் காவல்துறையிடம் புகாரளித்தார். 

ஆனால் இந்த சம்பவம் கப்பரேடு பகுதியில் நடந்ததால், இப்புகார் கப்பரேடு காவல்துறையினரிடம் மாற்றப்பட்டது. இதன் பெயரில் கப்பரேடு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து ஆதித்யா கபூரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.