லாஸ்லியாவுடன் இவரா? நீண்ட நாட்களுக்கு பிறகு முதன்முதலாக வெளியான புகைப்படம்! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

லாஸ்லியாவுடன் இவரா? நீண்ட நாட்களுக்கு பிறகு முதன்முதலாக வெளியான புகைப்படம்! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!


losliya-with-kavin-photo

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் லாஸ்லியா. இவர் இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளர். பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது முதல் பட்டாம்பூச்சி போல சுற்றி திரிந்த இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்பட்டாளமும்,  ஆர்மியும் உருவானது. 

அதனைத் தொடர்ந்து அவருக்கு கவின் மீது காதல் ஏற்பட்டு சிறு சலசலப்பும், சர்ச்சையும் கிளம்பியது. மேலும் அவரது தந்தை பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக வந்து கண்டிததை தொடர்ந்து அவர் போட்டியில் தனது கவனத்தை செலுத்தி 105 நாட்கள் கடந்து இறுதிவரை சென்று லாஸ்லியா மூன்றாம் இடத்தை பிடித்தார்.

losliyaa
ஆனாலும் பிக்பாஸ் வீட்டிற்குள் கவினுடன் மிகவும் நெருக்கமாக இருந்த லாஸ்லியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளிய வந்தவும் அவரை கண்டுகொள்ளவில்லை எனவும், அவருடன் ஒரு புகைப்படம் கூட வெளிவரவில்லை எனவும் ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.

இந்நிலையில் லாஸ்லியா கவினின் வரைந்த புகைப்படம் ஒன்றை தனது கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் செம குஷியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.