இதுதான் என்னுடைய கொள்கை.! அரசியல் என்ட்ரி குறித்து செம தெளிவாக நடிகர் ராகவா எடுத்துள்ள முடிவு!!
அடேங்கப்பா.. வேற லெவல்தான்! விரைவில் புதிய அவதாரமெடுக்கும் நடிகை ஜோதிகா! வெளிவந்த சூப்பர் தகவல்!!
அடேங்கப்பா.. வேற லெவல்தான்! விரைவில் புதிய அவதாரமெடுக்கும் நடிகை ஜோதிகா! வெளிவந்த சூப்பர் தகவல்!!
தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளிவந்த வாலி திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஜோதிகா. அதனைத் தொடர்ந்து அவர் சூர்யாவிற்கு ஜோடியாக பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமான அவர் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்தார்.
ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து எக்கச்சக்கமான ஹிட் படங்களில் நடித்த அவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்தார். அவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு சில காலங்கள் சினிமாவிற்கு முழுக்கு போட்டிருந்த ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து கதை மற்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார்.
ஜோதிகா அண்மையில் உடன்பிறப்பே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் நடிகை ஜோதிகா விரைவில் இயக்குனராக அவதாரமெடுக்கவுள்ளாராம். ஜோதிகா தற்போது இதுக்குறித்து தீவிர கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளாராம். மேலும் அப்படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கஉள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.