தன் கணவரை பிரிய இதுமட்டும்தான் காரணம்! முதன்முறையாக விவாகரத்து குறித்து மனம்திறந்த கானாபாடகி இசைவாணி!!

தன் கணவரை பிரிய இதுமட்டும்தான் காரணம்! முதன்முறையாக விவாகரத்து குறித்து மனம்திறந்த கானாபாடகி இசைவாணி!!



isaivani-talk-about-reason-of-divorce-with-husband

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் 5வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் பாடகி இசைவாணி. பெண்களாலும் அசத்தலாக கானா பாடல்களை பாட முடியும் என நிரூபித்த அவர் பல மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.  அவர் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

இசைவாணி தனது சக கானா பாடகரான சதீஷ் என்பவரை காதலித்து கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஓராண்டிலேயே பிரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுவரை தனது திருமணம் குறித்து பேசாத இசைவாணி சமீபத்தில் தனது விவாகரத்திற்கான காரணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

Isaivani

அவர் கூறியதாவது, நான் பல கனவுகளுடன் எனது திருமண வாழ்க்கையை தொடங்கினேன். ஆனால் அது நீண்டநாட்கள் நீடிக்கவில்லை. கானா பாடல் பாட எனது பெற்றோர் அளித்த ஆதரவு கணவர் வீட்டில் கிடைக்கவில்லை. 

எனக்கு கானா பாடல்தான் உயிர். அதை பாட கணவரின் குடும்பத்தில் அனுமதிக்காததால் நான் அந்த வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். தற்போது அவருக்கு வேறு திருமணம் நடந்துவிட்டது. எனக்கும் அந்த குடும்பத்துக்கும் எந்தவித தொடர்பும் தற்போது இல்லை என கூறியுள்ளார்.