நீயா நானாவில் கதறி அழுத கோபிநாத்.. திடீரென்று என்ன நடந்தது.?

நீயா நானாவில் கதறி அழுத கோபிநாத்.. திடீரென்று என்ன நடந்தது.?



Gopinadh cried in neeya naana show

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சிகளில் பிரபலமான நிகழ்ச்சி நீயா நானா. பல வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சியாகும்.

Gobi

இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை தொகுப்பாளராக கோபிநாத் இருந்து வருகிறார். இவரைத் தவிர வேறு யாராலும் இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக தொகுத்து வழங்க முடியுமா என்பதைக் கேள்விக்குறியே.

இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தலைப்பில் நீயா நானாவில் விவாதம் நடத்தப்படும். இதன்படி இந்த வாரம் இளையராஜாவின் பாடல்களை ரசிக்கும் ரசிகர்கள் ஒரு பக்கமும், பாடல்களை பாடுபவர்கள் மற்றொரு பக்கமும், இருந்து விவாதம் நடைபெற்றது.

Gobi

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வையற்ற நபர் ஒருவர் இளையராஜாவின் பிரபலமான பாடல் ஒன்றை பாடி இருந்தார். அப்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் அவர் பாடியதை கண்கலங்கியபடி கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் தீயை பரவி வருகிறது.