ஹீரோயின் படங்களில் நடிப்பது கவர்ச்சிக்காக மட்டுமா.. ரசிகரின் கேள்விக்கு லியோ பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் வெளிப்படையான பதில்.?
ஹீரோயின் படங்களில் நடிப்பது கவர்ச்சிக்காக மட்டுமா.. ரசிகரின் கேள்விக்கு லியோ பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் வெளிப்படையான பதில்.?
தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ஸ்டுடியோ கிரீன். இந்த நிறுவனத்தின் தலைவர் ஞானவேல் ராஜா. இவர் தமிழில் 'சில்லுனு ஒரு காதல்' திரைப்படத்தில் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய ஹிட்டானது.
இதனைத் தொடர்ந்து பருத்திவீரன், சிங்கம், சிறுத்தை, நான் மகான் அல்ல, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி, மெட்ராஸ், கொம்பன் போன்ற கார்த்தி மற்றும் சூர்யா திரைப்படங்களுக்கு மட்டுமே தயாரிப்பாளராக இருந்து வந்தார். பல திரைப்படங்கள் வெற்றியடைந்த பின் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் தயாரிப்பாளராக இருந்து வருகிறார்.
இதனையடுத்து தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் 'லியோ' திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அந்த பேட்டியில் ரசிகர்கள் பலர் கேள்வி கேட்டதற்கு சுவாரசியமான பதிலை அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், ரசிகர் ஒருவர் கதைக்காக ஹீரோவா இல்லை ஹீரோவிற்காக கதையா என்று கேள்வி கேட்டார். இதற்கு ஹீரோ தான் எல்லா முடிவையும் எடுப்பார் என்று வெளிப்படையாக பதில் அளித்தார். இதன் பின்பு படத்துல ஹீரோயின் கவர்ச்சிக்காக மட்டும் தான் இருக்கிறார்களா என்று மற்றொரு ரசிகர் கேட்டதற்கு அதற்கும் ஹீரோ தான் எல்லாத்திற்கும் முடிவு எடுப்பார் என்று பதில் அளித்தார். இந்த பேட்டி தற்போது வைரலாகி இவர் நடிகர் விஜயை தான் குறிப்பிடுகிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.