பருத்திவீரன் பட சர்ச்சை.! இயக்குனர் அமீரிடம் வருத்தம் தெரிவித்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.!

பருத்திவீரன் பட சர்ச்சை.! இயக்குனர் அமீரிடம் வருத்தம் தெரிவித்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.!



gnanavel-raja-expressed-regret-to-director-ameer

இயக்குனர் அமீர் இயக்கத்தில் அறிமுக நாயகனாக நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம்தான் பருத்திவீரன். இந்த படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் பருத்திவீரன் படத்தை சொன்ன தேதிக்குள் இயக்காமல் தவறான கணக்கு காட்டி பணத்தை திருடிவிட்டதாக இயக்குனர் அமீர் மீது ஞானவேல் ராஜா குற்றசாட்டு வைத்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து அந்த குற்றச்சாட்டுக்கு அமீரும் விளக்கம் கொடுத்தார். நடிகர் சசிகுமார், சமுத்திரகனி, பாரதிராஜா பொன்வண்ணன் போன்றோர் அமீருக்கு ஆதரவாக ஞானவேல் ராஜாவின் குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்தனர். தற்போது அதற்கு பதிலளிக்கும் விதமாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ameer

அதில் அவர், பருத்தி வீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே அமீர் அண்ணா என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. 

அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான் என தெரிவித்துள்ளார்.