இத்தனை வருடங்களுக்குப் பிறகு நன்றி தெரிவித்த கர்ணன் பட இயக்குனர்.. காரணம் தெரிந்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!

இத்தனை வருடங்களுக்குப் பிறகு நன்றி தெரிவித்த கர்ணன் பட இயக்குனர்.. காரணம் தெரிந்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!



Director mari selvaraj twitter post

கோலிவுட், திரையுலகின் பிரபல இயக்குனரான மாரி செல்வராஜ் 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் மூலம் பிரபலமாக அறியப்பட்டார். இப்படம் மிகப்பெரிய ஹிட்டாகி மாரி செல்வராஜுக்கு அடுத்தடுத்த படங்கள் இயக்க வாய்ப்புகள் குவிந்தன.

Mari selvaraj

மேலும், இப்படத்தில் நடித்த அறிமுக நடிகைகள், நடிகர்கள் போன்றவர்களின் கதாபாத்திரங்கள் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வந்தது. இதன் பிறகு மாறி செல்வராஜ் தனுஷ் நடித்த 'கர்ணன்' படத்தை இயக்கினார். இப்படம் 2021 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.

இப்படம் வெளியான சமயத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு திரையரங்குகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் திரையரங்கில் ஓடி விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றது.

Mari selvaraj

இது போன்ற நிலையில், ட்விட்டர் பக்கத்தில் மாறி செல்வராஜ் பதிவிட்டிருக்கும் பதிவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே 'கர்ணன்' திரைப்படத்தை இந்த அளவிற்கு வெற்றி பெற வைத்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் 'கர்ணன் தி சேவியர்' என்ற புகைப்படத்தையும் மாறி செல்வராஜ் பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.