திருமணத்திற்காக இத்தாலி படையெடுக்கும் சினிமா பிரபலங்கள்; அடுத்த ஜோடி யார் தெரியுமா?

திருமணத்திற்காக இத்தாலி படையெடுக்கும் சினிமா பிரபலங்கள்; அடுத்த ஜோடி யார் தெரியுமா?


depika-padukona---runveer-sing---marriage---italy

பாலிவுட் முன்னணி திரை நட்சத்திரங்களான தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் இருவரும் தங்களின் திருமணத்திற்காக இத்தாலி புறப்பட்டு சென்றுள்ளனர்.

பாலிவுட் சினிமா பிரபலங்கள் தங்களின் திருமணத்தை வெளிநாடுகளில் செய்து கொள்வது தற்போது பேஷனாகி வருகிறது. அதிலும் குறிப்பாக இத்தாலி நாட்டை தங்களின் விருப்ப நாடாக தேர்ந்தெடுத்து வருகிறார்கள்.

அந்தவகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா, நடிகை ராணி முகர்ஜியை திருமணம் செய்துகொண்டு இத்தாலி கலாச்சாரத்தை தொடங்கி வைத்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அனுஷ்கா சர்மா திருமணம் இத்தாலியில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

italy

இந்த நிலையில் பாலிவுட் திரையுலகில் முன்னணி திரை நட்சத்திரங்களாக விளங்கும் தீபிகா படுகோனேவும் ரன்வீர் சிங்கும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய கடந்த 10ஆம் தேதி இத்தாலி புறப்பட்டு சென்றுள்ளனர். அவர்களின் திருமணம் வருகின்ற 15 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் காமோ நகரில் வெகுவிமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமணத்திற்கு இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபிகாவின் கோங்கனி குடும்ப வழக்கப்படியும், ரன்வீர் சிந்தி குடும்ப வழங்கப்படியும் இந்த திருமணம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து டிசம்பர் 1ம் தேதி மும்பையில் பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.